சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜேசுதாசன் கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருள்மொழி, நிஸ்கோ முகாமையாளர் சதீஸ்வரி கிருபாகரன்,
மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் யுவப்பிரகா, மாவட்ட மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.