மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அணுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம் பெற்றது.இதன் போது இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்பட்டு அவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல்களும் மேற் கொள்ளப்பட்டன.
காத்தான்குடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் .உதய சிறீதர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்வழிகாட்டல் செயலமர்வில் 200 மாணவர்கள் கலந்து கொண்;டமை குறிப்பிடத்தக்கது.