30 C
Colombo
Monday, May 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறு தேன்கல் பிரதான வீதியில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.


திகிலிவெட்டை பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய கணபதிப்பிள்ளை சபேந்திரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே காட்டு யானை தாக்குதலில்
உயிரிழந்தவராவர்.


உயிரிழந்த நபர் வழமையாக திகிலிவெட்டையிலிருந்து தரவை பகுதிக்கு தன்னுடைய கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்று காலை மற்றும் மாலை வேளையில்
தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புபவராவர்.


வழமை போன்று இன்று காலை திகிலிவெட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிறுதேன்கல் பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தரவைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தவேளை, வயல் வேலைக்காக வீதியால் நடந்து சென்ற குமார் சதீஸ்வரன் என்ற 22 வயதுடைய இளைஞரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.


சிறுதேன்கல் காட்டு வழிப்பாதை ஊடாகச் சென்று கொண்டிருந்த வேளையில் எதிரே துரத்திக் கொண்டு வந்த காட்டு யானையைக் கண்டு இருவரும் ஓட முற்பட்ட வேளை,
யானை இருவரையும் தாக்கியுள்ளது.


மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில், மற்றைய நபர் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர், வாழைச்சேனை ஆதாரம் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Related Articles

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம்...

843 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு!

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு...

பொதுமக்களுக்கு வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு...