32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாஸ்டர் அக்‌ஷத்தைப் பாராட்டியுள்ள நவாசுதீன் சித்திக்

‘சீரியஸ் மேன்’ படத்தில் தன்னுடன் நடித்துள்ள மாஸ்டர் அக்‌ஷத்தை நவாசுதீன் சித்திக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்திருந்தவர் மாஸ்டர் அக்‌ஷத். அந்தப் படத்தில் விஜய்யுடன் சில முக்கியக் காட்சிகள், பாடலில் எல்லாம் நடித்திருப்பார்.

தற்போது நவாசுதீன் சித்திக் உடன் இணைந்து ‘சீரியஸ் மேன்’ என்னும் படத்தில் அக்‌ஷத் நடித்துள்ளார். சுதீர் மிஸ்ரா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக்கின் மகனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாஸ்டர் அக்‌ஷத்.

இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் தன்னுடன் நடித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் நவாசுதீன் சித்திக்.

தற்போது அக்‌ஷத்துடன் நடித்தது குறித்து நவாசுதீன் சித்திக் கூறியிருப்பதாவது:

“அக்‌ஷத்தை ஒரு குழந்தையாக நடத்தக் கூடாது என்பதை என்றுமே அவன் எனக்கு உணர்த்தியிருக்கிறான். இயக்குநரின் பார்வையில் விஷயத்தைப் புரிந்துகொள்ளும் அழகான திறன் அவனுக்கு இருக்கிறது. அவனது இந்தக் குணம் அவன் முன் என்னைச் சரணடைய வைத்துவிட்டது”.

இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

Related Articles

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...