மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று முன்தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத்தளபதி கூறினார்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.