வியத்நாமில் கொரோனாநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.
எனினும், வியத்நாம் குடிமக்கள், தூதரக அதிகாரிகள், நிபுணா்கள், நிறுவனங்களின் மேலாளா்கள், தோ்ச்சி பெற்ற பணியாளா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, வியத்நாமில் 1,063 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 35 போ் பலியாகியுள்ளனா். 936 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 92 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். கொரோனா பாதிப்பில் வியத்நாம் உலகின் 165-ஆவது இடத்தில் உள்ளது.