32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத் கூட்டணி

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் – அனிருத் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்த பல படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.

தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், இந்தக் கூட்டணி ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு இணைந்து பணிபுரியவே இல்லை. தனுஷ் – அனிருத் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இணைந்து பணிபுரியமாட்டார்கள் என்று தகவல் பரவியது.

தனுஷ் மற்றும் அனிருத் இருவரிடமும் எப்போது இணைந்து பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு “விரைவில்” என்பதை மட்டுமே பதிலாகக் கூறிவந்தார்கள். தற்போது, இந்த விரைவில் என்ற வார்த்தை நிஜமாகியுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, அனிருத் ஒப்பந்தமாகியிருப்பதையும் அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Articles

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.