28 C
Colombo
Monday, March 27, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு

முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘தேவராட்டம்’ படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார் முத்தையா. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

மீண்டும் கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார், கார்த்தி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், இறுதியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.

இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விக்ரம் பிரபு நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்டிலும் வெளியாகவுள்ளது.

குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. இதற்கு ‘பேச்சி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...