32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

முத்தையா முரளிதரன் பயோபிக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரன் பயோபிக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்த் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதிதான். அவருடைய நடிப்பில் ‘கடைசி விவசாயி’, ‘மாஸ்டர்’, ‘மாமனிதன்’, ‘உபென்னா’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘லால் சிங் சத்தா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இந்தப் படங்கள் போக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படம் என்பதால் சர்ச்சையும் உண்டானது.

இதில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்டது. விரைவில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகையால், இந்தப் படத்துக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...