முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வு யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களால் கலந்துகொண்டனர்.