கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 374 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 74 இலங்கையர்களும் , மாலைதீவில் இருந்து 10 பேரும் ,தென் கொரியாவில் இருந்து 285 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.