கொரோனாவைரஸ் தொற்றுபரவலைகட்டுப்படுத்ததுவதற்காகமுன்னெடுக்கப்படும் தேசியவேலைத்திட்டத்தின் ஒருஅங்கமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசிஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், மேல்மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுமுள்ள இராணுவ வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவின் கண்காணிப்பின் கீழேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் பத்தரமுல்லை தியன உயன இராணுவ தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையத்தில் மேல்மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இவ்வாறாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.