கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.