யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள, நடேஸ்வரக் கல்லூரியின் விளையாட்டு அரங்கு திறப்பு விழா, இன்று நடைபெற்றது.
கல்லூரி அதிபர் கு.விமலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வலிகாமம் கல்வி வலய பொது நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் ஞா.ஆதவன் மற்றும் கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் பழைய மாணவரான க.தனபாலசிங்கம் ஞாபகார்த்தமாக, அவர்களது சகோதரர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் இணைந்து, விளையாட்டரங்கை அமைத்துக் கொடுத்த நிலையில், இன்று, திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.