31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய பிடியாணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது.

உக்ரைனில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களுக்கு அவரே பொறுப்பு என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா ஒரு தலைப்பட்சமாக போரை ஆரம்பித்தது.

இரு நாடுகளும் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன.

இதனிடையே, ரஷ்யா மீது பல போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ரஷ்யா பலமுறை மறுத்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனைச் சேர்ந்த சிறுவர்களையும் மக்களையும் சட்டவிரோதமாக ரஷ்யா தனது நாட்டுக்கு இடம் மாற்றியது என்ற குற்றச்சாட்டில் ஐ.சி.சி விளாடிமிர் புடினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles