26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ராஜபக்ஷர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகளையே ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுக்கின்றார் – சமீர பெரேரா

ராஜபக்ஷர்கள் இதுவரை செய்த சில்லறைத்தனமான செயற்பாடுகளையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செய்து வருகின்றார் என்று ‘முதலில் அரசியல் அமைப்பு’ இன் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷர்களை போன்றே ரணில் விக்கிரமசிங்கவும் செயற்படுகின்றார்.

ராஜபக்ஷர்களின் அரசியலை பின் தொடர்வது போன்றே தற்போதைய ஜனாதிபதியின் போக்கும் அமைந்துள்ளது.

போராட்டக்காரர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினரும் இருக்கின்றனர்.

இவ்வாறான தரப்பினர், அதேபோன்று பிரதேச சபை உறுப்பினர்கள் என்பவர்களை திரட்டி சீனா தூதுவராலயத்துக்கு முன்பாக சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர்.

எதற்காக ராஜபக்ஷர்களுக்கு இனி இல்லை என்றளவில் கடன் வழங்கி நாட்டை கடன்கார நாடாக மாற்றியுள்ளீர்கள் என்று இந்தத் தரப்பினர் கேள்வி எழுப்பும் வகையில் நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.

கடனை மறுசீரமைக்க வேண்டியது அவசியம். ஏன் அதனை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பிகின்றனர்.

மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் வெறும் கண்துடைப்பான செயற்பாடுகளாகும்.

இவ்வாறான போராட்டாங்களால் சீன அரசாங்கம் ஒன்றும் பயந்துவிடப்போவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் மிகச் சிறந்த இராஜதந்திரி என்று அநேகமானோர் நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் அவ்வாறு இல்லை. அவர் மிகச் சிறந்த இராஜதந்திரி என்பதற்கு பதிலாக ராஜபக்ஷர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகளை அரங்கேற்றும் நபராகவே அவர் செயற்படுகின்றார்.

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.