வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நேற்று (14) காலை 9.45 மணியளவில், வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா பிரதேசத்தில் கடமையாற்றும் திணைக்கள அதிகாரிகள், அரச ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநாதாரலிங்கம், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முத்து முகம்மது, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராயசிங்கம், நகர சபை தலைவர் இ.கௌதமன் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்ட போதும், செய்தி சேகரிப்பதற்கு சென்ற பிரதேச செய்தியாளர்களுக்கு, பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற, பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில், ஊடகவியலாளர்களுக்கு என இடம் ஒதுக்கப்பட்ட போதும், வவுனியா பிரதேச செயலாளரால், நேற்று (14) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு, இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இட நெருக்கடிக்கு மத்தியில், ஊடகவிலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்தனர்.