அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் மு.சண்டேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்வி பிரதிக் கல்விப்பணிப்பாளர் மாதுரி மயூரன்,
திருக்கோவில் வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதகாரன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிகலாசாலை விரிவுரையாளர்
வெ.இராசவேல், பாடாசலை அபிவிருத்திச்சங்க செயலாளர் வெ.சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகளை வரவேற்கும் நிகழ்வைத் தொடர்ந்து இரண்டாம்; தர மணாவர்கள் முதலாம் தரமாணவர்களை மாலைஅணிவித்து சம்பிரதாய பூர்வமாக வெற்றிலை கொடுத்துவரவேற்றனர்.
பின்னர் இணைந்துள்ள புதியமாணவர்களை இரண்டாம் தரமாணவர்கள் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றதுடன் பெற்றோர்கள் வரவேற்று இனிப்புபண்டங்களையும் பரிசுப்பொதிகளையும் வழங்கினர்.
மண்டபத்தில் இடம்பெற்ற அதிபரின் தலைமையுரையை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.