அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்தது.
குறித்த பற்சிகிச்சை நிலையத்தினை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் திறந்து வைத்தார்.
மக்கள் நல்வாழ்வு மையத்தின் 16 இலட்சம் ரூபா நிதி உதவியில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதன் மூலம் அச்சுவேலி மற்றும் அதனை அண்மித்த பல கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரனும், சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பி.சத்தியகுமார் , அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் பி.குணதீபன் மற்றும் திரு.மதுரமணி இராசையாவும் மற்றும் விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.