அநீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் மாற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என 15 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இன்றைய சம்பள தினத்தின் பின்னர் இது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கறுப்பு எதிர்ப்பு வாரத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மருத்துவ பீட விரிவுரையாளர்களின் சம்மேளனம், இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை, வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் தொழிற்சங்க போராட்டங்களை மேலும் இறுக்கமாக்கவுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.