27 C
Colombo
Wednesday, April 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறையில் போராட்டத்துக்கு நீதிமன்று நேற்றுத் தடை விதிப்பு

அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரால் வழங்கப்பட்டது.

இந்தப் போராட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு நீதிமன்றத் தடை உத்தரவை நேற்றுச்சனிக்கிழமை மாலை வழங்கியுள்ளது.

அத்துடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை அவ்விடத்தில் பொலிஸார் வாசித்துக் காட்டினர்.

இதன்போது, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் தாமோதரம் பிரதீபன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என்.தர்சினி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் உட்பட பலருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles