அம்பாறை கல்முனை விசேட அதிரடிப் படையினர் தமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக பெரியகல்லாறுப் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்
போது, கசிப்பு கடத்திய 19 வயதுடைய இளைஞனொருவரைக் கைது செய்துள்ளனர்.
இளைஞனிடமிருந்து 20 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதோடு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.