அம்பாறை திருக்கோவில் காஞ்சிரம்குடா மீள்குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகளான வனகுரவர் மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக
ஒரு நாள் விழிப்பூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் ஒழுங்குபடுத்தலின் ஊடாக அமைப்பின் இணைப்பாளர் கலைவாணி தயாபரன் தலைமையில் காஞ்சிரம்குடா கிருஸ்தவ
தேவாலய ஒன்றுடல் மண்டபத்தில் இடம்பெற்று
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு சட்ட பாதுகாப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி அஸீஸ் வளவாளராக கலந்து கொண்டுதெளிவூட்டல்களை வழங்கினார்.
திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.