30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை காரைதீவில் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தக வெளியீடு

ஆசிய நிலையத்தின் அனுசரனையுடன் கெப்சோ நிறுவனத்தினால் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கெப்சோ நிறுவனத்தினால் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தகவெளியீடு நேற்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

புத்தக வெளியிட்டாளரும் கெப்சோ நிறுவன திட்டப்பணிப்பாளருமான ஏஜே.காமில் இம்டாட் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், மேலதிக பிரதேசசெயலாளர் எஸ்.பார்த்திபன் காரைதீவுப் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரிகள் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சுரேகா எதிரிசிங்க,காரைதீவுப் பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெனிட்டா, கெப்சோ நிறுவன உத்தியோகஸ்தர்கள், மாதர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles