அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று வீடொன்றின் முற்றத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.