அம்பாறை மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான அல்மனாரீயன் 89 ஆண்டு உயர்தர பழைய நண்பர்கள் அமைப்பின்
ஒன்று கூடலும் சீருடை அங்குரார்ப்பண நிகழ்வும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
89 ஆண்டு இலச்சினை பதிக்கப்பட்ட சீருடை காட்சிப்படுத்தப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.
89 ஆண்டில் உயர்தர மாணவர்களாக கல்வி கற்று தற்போது பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ள பிரபலமான நபர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
இப்பழைய மாணவர் அமைப்பானது எதிர்காலத்தில் பல்வேறு உதவிகளை பாடசாலைகளுக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளவுள்ளதாக
தெரிவித்துள்ளது.