நுவரெலியா ஹட்டன் நகரில், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டகாரர்கள் பேரணியாக ஹட்டன் நகரத்திலிருந்து மல்லியப்பு சந்தி வரை சென்று, அங்கு ஒன்றுகூடி போராட்டத்தினை
முன்னெடுத்தனர்.
பின்னர் மீண்டும் ஹட்டன் நகரத்தை பேரணியாக சென்றடைந்திருந்தனர்.