இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலன்வீதிய இரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெலன்வீதிய, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மேற்படி வீட்டின் அறையொன்றை வாடகைக்கு எடுத்து இருந்துள்ளார் என்றும் மெத்தையில் ஏற்பட்ட தீ அறை முழுவதும் பரவியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.