பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நானும் ரெளடிதான் பட உருவாக்கத்தின்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்களாகினர். அண்மையில், இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இருவரும் திருமண திகதியையும் அறிவித்தனர்.
இயக்குநர் விக்ஷேன் சிவன் தமிழ்நாடு – லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் நயன்தாரா – விக்ஷேன் சிவன் ஆகிய இருவரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றனர்.