28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி மொத்தமாக 10,655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்று இலங்கையில் நடத்தப் பட்டுள்ளன.

இதுவரை கொவிட்- 19 பாதிப்புற்ற 545,043 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் கூறுகையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனைகளை நிறைவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles