இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனை தெரிவித்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகைதந்தார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்களை, நடத்தவுள்ளார்.