நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித வளநகர் வட்டார வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தமது கட்சியை உடைப்பதற்கு சிலர் கங்கணம் கட்டி பொய் பிரசாரங்களை மேற்கொண்டுவருதாகவும், தான் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காத சிலர் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!
0
127