32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி தென் கொரியாவில் மாயம்!

ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் போட்டியில் கலந்து கொண்ட அவர், இன்று காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர், தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, இஞ்சியோனில் உள்ள நம்டோங் பொலிஸார் மகளிர் அணித் தலைவியை கண்டுபிடிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இலங்கை ரக்பி அணிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துலானியை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles