மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியமான ஐவெயார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அனீஸா பிர்தௌஸ் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
எதிர் வரும் 10ம் திகதி மனித உரிமைகள் தினத்தையொட்டி இந்த செயலமர்வு நடைபெற்றது.
இந்த செயலமர்வில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நழீமி உரையாற்றியதுடன் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.எ.அஸீஸ் உரையாற்றினார்.
இதில் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிருவாகிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.