உலக நீர் தினத்தை முன்னிட்டு, மன்னார் கரித்தாஸ்- வாழ்வுதயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால், மிசறியோ நிதி உதவியில், நீண்ட நாட்களாக, மன்னார் சௌத்பார் கிராமத்தில் பாவனையற்று இருந்த பொதுக்கிணறு புனரமைப்புச் செய்யப்பட்டு, இன்று, உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீர் தினத்தின் முக்கியத்துவம், தற்கால நீரின் சவால் போன்ற விடயங்களை உணர்த்தும் முகமாக, கவனயீர்ப்பு ஊர்வலமும், கருத்தமர்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கரித்தாஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் அடிகளார், தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் தொழில்நுட்ப உதவியாளர் பாலசிங்கம் தயாபரன், மத்திய சுற்றாடல் அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.றெஜிவோல்ரன், வன திணைக்கள வன விரிவாக்கல் உத்தியோகத்தர் அருண்ராஜ், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ரிசர ஹம்புகே, சௌத்பார் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், இளையோர் என பலரும் இணைந்துகொண்டனர்.