உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவரை நாட்டுக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமைக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளிளியட்டுள்ள கானொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவரை நாட்டுக்கு அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமைக்காக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய வெள்ளவத்தை பகுதியில் வசிப்பவர் ஆவார்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான் பெண்ணை நாட்டிற்கு அழைத்துவந்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் மனைவி உஸ்பெகிஸ்தான் நாட்டவர, இதேகுற்றத்திற்காக இலங்கையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு தற்சமயம் அவர் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றார்.
இந்நிலையில் தண்டனைச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் சந்தேகநபர் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்படுவார்.
மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை அவருக்கு எதிராக விதிக்கமுடியும்.