அம்பாறை மாவட்டம் கல்முனை பெரியநீலாவணை சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு தத்தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இராணுவத்தினர் பொலிஸார் இம்மாவட்டத்தின் முக்கிய சந்திகளில் ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இன்று காலை பாடசாலைகள் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் வியாபார நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் நண்பகலுடன் மூடப்படடு வீதிகளும் வெறிச்சோடிக்காணப்பட்டன.
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.