32 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏறாவூரில் இரண்டாவது நபருக்கு கொரோனா உறுதி

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர் நீதிமன்ற வீதியைச்சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏறாவூர்ப்பிரதேசத்தில் வைரஸ் அழிப்பு மருந்து விசிறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்ப் பொலிஸார் நகர சபையுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர்ப் பொதுச்சந்தை, பெண் சந்தை மற்றும் செங்கலடி சந்தை கட்டடங்களுக்கும் இம்மருந்து விசுறப்பட்டன.

பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எச்.டபிள்யு.கே.ஜயந்த மற்றும் நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் ஆகியோர் இந்நடவடிக்கையினை மேற்பார்வை செய்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles