கம்பளை தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் வருகைதந்த சிற்றூர்தியை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. அதன் சாரதி, குறித்த சிற்றூர்திக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.