மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மர்{ஹம் கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபா ஆசிரியரின் நினைவு நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு நிகழ்வு இடம் பெற்றது.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார், மர்{ஹம் கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபா பற்றிய சிறப்புரையைநிகழ்த்தினார்.
சிறப்புக் கவிதையை மௌலவி யு.எல்;.எம்.பௌஸ் பாடியதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த மர்{ஹம் கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபாவின் கலை கலாசார நிகழ்வுகளின் ஆவணப்படம் திரையில் காண்பிக்கப்பட்டது.
அது தொடர்பான விளக்கவுரையினை காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன் நிகழ்த்தினார்.