நாடாளாவிய ரீதியில் கடந்த மூன்று தினங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று ஏழு மணிநேரம் தளர்த்தப்பட்டதையடுத்து நாட்டின் பலபாகங்களிலும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த கல்முனை,பாண்டிருப்பு ஆகியபொதுச் சந்தைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றதுடன்பிரதேசமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது
அம்பாறை மாவட்டத்தில் அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்த போதிலும் அரச ஊழியர்களின் வரவுகுறைவாக இருந்தன. அத்துடன் பாடசாலைகள் இயங்கவில்லை.