31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

களுதாவளையில் கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், குறித்த சடலம் தொடர்பில் கிராம சேவகருக்கு அறிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவகர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று சடலத்தை, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles