உலக காசநோய் தினமான இன்று, காசநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி ஒன்று, வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை ‘ஆம் எங்களால் காசநோயை முடிவிற்கு கொண்டுவர முடியும்’ எனும் தொனிப்பொருளில் பேரணி இடம்பெற்றிருந்தது.
முன்னதாக வவுனியா வைத்தியசாலையின் மார்புநோய் சிகிச்சை பிரிவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த பேரணி வவுனியா புதிய பேருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.
பேரணியில் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர் என பலர் கலந்து கொண்டனர்.