31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? எனவும், அதனால் எந்த ஒரு பயன்பாடும் இல்லை எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள், கடந்த 12 வருடங்களாக, தொடர்ச்சியாக, சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலங்கை அரசாங்கம், இதுவரை நீதியை பெற்றுத் தரவில்லை என, உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்று, மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles