காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயம், கோழிவளர்ப்பு, சிறுவர் மேம்பாடு சுகாதாரம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
டெங்கு நோயின் தாக்கம் பற்றி இங்கு விளக்கி கூறப்பட்டதுடன் டெங்கு தொடர்;பான விழிப்புணர்வும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் ஜாயிதா ஜலால்தீன் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், எனப் பலரும் கலந்து கொண்டனர்.