கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
விஷேட அதிதிகளாக குணரெட்ணம், தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் சுந்தரலிங்கம் மற்றும் முருகன் ஆலய செயலாளர் எஸ்.சிவகுமார், பெற்றோர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவ சங்கச் செயலாளர் சுகிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.