இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும், அன்ன தானத்திலும் பங்கேற்றனர்.
இவர்களை குரு குடைச்சாமி சர்வமத பீடத்தின் பரிபாலகர் கொடைச்சாமி ஜீவாகரன் சுவாம்ஜி, ரமண யோகி சிவஞானம் ஆகியோர் தமிழ் – இந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்று மலர் மாலைகள், இலை மாலைகள் அணிவித்து ஆசிர்வதித்தார்கள்.
இங்கிலாந்து அடங்கலாக மேற்கு உலக மக்கள் அவசரமான, போலி வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாக ரெய்க்கி சிகிச்சையாளரான டானியல் அடியார்கள் இதன்போது கருத்து வெளியிட்டார்.