26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு சீன அரசனின் உதவியுடன், கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் திருக்கோவில் பிரதேச சபையின் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.


திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் ஜெயந்தினி வீரபத்திரன் தலைமையில், திருக்கோவில் பிரதேசசபை வளாகத்தில் இன்று நிவாரணப் பொருட்கள்
விநியோகிக்கப்பட்டன.


திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பொருளாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு தலா ஆறாயிரம் ரூபா பெறுமதியான
உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.


நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர் கே.தேவப்பிரியன், திருக்கோவில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles