யாழ்ப்பாண சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி, சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம், தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.