மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வீக நூலாக கருதப்படும் திருமந்திரத்தினை, கருங்கல்லில் செதுக்கி சிவபூமி திருமந்திர அரண்மனை
அமைக்கப்பட்டுள்ள நிலையில் திருமந்திர அரண்மனையில் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இலங்கையின் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் திருப்பணிகள் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.